பிரதமர் மோடியை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த நடிகை

  • IndiaGlitz, [Thursday,November 01 2018]

பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று உலகின் மிக உயரந்த சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை குஜராத்தில் திறந்து வைத்தார். ஒற்றுமைக்கான சிலை என்ற பெயருடன் அழைக்கப்படும் இந்த சிலையால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ரூ.3000 கோடியில் இப்படி ஒரு சிலை தேவையா? என்ற ரீதியிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தனுஷ் நடித்த 'பொல்லாதவன்', சிம்பு நடித்த 'குத்து' உள்பட பல படங்களில் நடித்த நடிகை ரம்யா, இந்த சிலை குறித்தும் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

நடிகை ரம்யா தனது டுவீட்டில், '''அது என்ன பறவையின் கழிவா'' என்பதை குறிக்கும் வகையில் 'Is that bird dropping?' என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவீட்டை பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.