close
Choose your channels

சமூக வலைத்தளங்களில் இருந்து திடீரென விலகிய 'மாஸ்டர்' நடிகை!

Monday, May 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அனேகமாக இந்த படம் தீபாவளி அன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் சமூக வலைத்தளத்தில் இருந்து திடீரென விலகியதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தளபதியின் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை ரம்யா சுப்பிரமணியம். தொலைக்காட்சியில் பிரபலமாகி அதன் பின்னர் மணிரத்னத்தின் ’ஓகே கண்மணி’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு ‘மாஸ்டர்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இயக்குனர் லோகேஷ் வாய்ப்பு கொடுத்திருந்தார். இவரது கேரக்டர் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அனைத்து சமூக வலைதளங்களிலும் பிரபலமாகி வந்த ரம்யா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென சமூக வலைத்தளத்தில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது: "இந்த ஊரடங்கின் கடைசி வாரத்தை மெதுவாக எடுத்துக்கொள்ளப் போகிறேன். உயிரோடு இருப்பதற்காக என் இதயமும் மனமும் பாராட்டை விரும்புகின்றன. இருக்கும் அனைத்துக்காகவும் நன்றி செலுத்தி ஒவ்வொரு தருணத்தையும் முழுமையாக வாழுங்கள். கவலை வேண்டாம். நான் முற்றிலும் நன்றாக இருக்கிறேன். ஒரு குட்டி இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன் என் அன்பு மக்களே. அதுவரை உங்கள் உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்".

நடிகை ரம்யா திடீரென சமூகவலைதளத்தில் இருந்து விலகிடதற்கான காரணம் தெரியாமல் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.