பாவாடை தாவணியில் பார்த்த உருவமோ இது.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை ரம்யா பாண்டியன், திருமணத்திற்கு பின்னரும் தனது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், சற்றுமுன் அவர் பாவாடை தாவணியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியவுடன் ஏராளமான கமெண்ட்ஸ்களும் லைக்குகளும் குவிந்து வருகிறது.
நடிகை ரம்யா பாண்டியன், இன்ஸ்டாகிராமில் சுமார் 3 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். அவ்வப்போது தனது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக, கிளாமர் ஃபோட்டோஷூட் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் பகிர்ந்துள்ள பாவாடை தாவணி ஃபோட்டோஷூட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கருத்துகள் பதிவாகி வருகின்றன.
ஒரு ரசிகர், "பழைய சிவாஜி படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகளான ‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமோ’ என்ற பாடல் நினைவுக்கு வருகிறது" என்று கமெண்ட் செய்துள்ளார்.
மற்றொரு நெட்டிசன், "உங்கள் உண்மையான அழகு இந்த காஸ்ட்யூமில்தான் தெரிகிறது. இப்படி இன்னும் பல கலாச்சார காஸ்ட்யூம்களை அணிந்து புகைப்படங்கள் வெளியிடுங்கள்" என்றும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com