இனிமேல் இப்படி செய்தால் அவ்வளவுதான்.. நடிகை ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை ரம்யா சுப்ரமணியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய வீடியோவை ஏஐ மூலம் முறைகேடாக மாற்றி வெளியிடும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இனிமேல் இவ்வாறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விஜே ரம்யா, மணிரத்னம் இயக்கிய "ஓகே கண்மணி" உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா சுப்பிரமணியனுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பல நடிகைகள் மற்றும் பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்களில் உள்ள வீடியோக்களை எடுத்து, அதை ஏஐ மூலம் ஆபாசமாக மாற்றி, குரல்களில் மாற்றம் செய்து வெளியிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ரம்யா சுப்ரமணியன் வீடியோவும் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டதாவது: “இது மூன்றாவது தடவை என்னுடைய வீடியோ ஏஐ மூலம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இது உண்மையில் சட்டத்திற்கு புறம்பானது. என்னுடைய தனிப்பட்ட உரிமைகளை மீறும் வகையில் மோசடியான செயல். அதை இப்போதே நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவருடைய இந்த எச்சரிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com