close
Choose your channels

துபாயில் தங்கநகை கடை வைத்திருக்கிறாரா நடிகை ரன்யா ராவ்.. விசாரணையில் திடுக் தகவல்..!

Thursday, March 20, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

துபாயில் இருந்து பெங்களூருவுக்கு தங்கம் கடத்தியதாக சமீபத்தில் நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். முதலில், வெறும் குருவியாகவே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது, அவர் துபாயில் தனது கன்னட நடிகர் ஒருவருடன் இணைந்து தங்கநகை கடையை நடத்தி வருவதாகவும், அந்த கடையில் இருந்து தங்கத்தை இந்தியாவுக்கு பலமுறை கடத்தி வந்திருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் தருண் மற்றும் ரன்யா ராவ் ஆகிய இருவரும் 50-50 சதவீத பங்குதாரர்களாக துபாயில் ஒரு நகைக்கடை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. "விரா டைமண்ட்ஸ்" என்ற அந்த நகைக்கடையில் வெளிநாட்டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு, அங்கேயே விற்பதாக கணக்கு காண்பிக்கப்படுகிறது. இருப்பினும், பலமுறை அவர் இந்தியாவுக்கு தங்கத்தை கடத்தி வந்திருப்பதாகவும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 27 முறைக்கு மேல் தங்கத்தை கடத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அவரின் வங்கி கணக்குகளும் தருண் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. அதில் பல கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு சர்வதேச தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment