மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் ராஷ்மிகா.. 2 வைரல் பதிவுகள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக, அந்த நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ராஷ்மிகாவும் அதையே ஆமோதித்து பதிவு செய்துள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் விளங்குகிறது. 2015ஆம் ஆண்டு முதல் தொடங்கி, பல வெற்றி படங்களை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படமும் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவானது தான்.
இப்போது நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் நான்காவது படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தான் தயாரிக்கிறது. இதே நேரத்தில், அடுத்த தயாரிப்பு படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக இருப்பது குறித்து ஒரு பதிவு வெளியாகியுள்ளது. இதனை ராஷ்மிகா தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து, ரசிகர்கள் அந்த படம் என்னவாக இருக்கலாம்? என்ற ஆர்வத்தில் உள்ளனர். இது விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமாக இருக்கலாம் என்றும், அல்லது ஜூனியர் என்டிஆர் – பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் படமாக இருக்கலாம் என்றும் கூற்றுகள் வெளியாகின்றன.
ஏற்கனவே, மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்த ‘புஷ்பா’ மற்றும் ‘புஷ்பா 2’ படங்களில் ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மீண்டும் அதே நிறுவன தயாரிப்பில் இணைவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
— Mythri Movie Makers (@MythriOfficial) May 2, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments