close
Choose your channels

திருமண போட்டோஷூட் சர்ச்சை.. விளக்கம் அளித்த புஷ்பா புருஷன் நடிகை..!

Sunday, July 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்த நடிகை ரேஷ்மாவின் திருமண போட்டோ சமீபத்தில் வைரலான நிலையில் இது குறித்து தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்

’பிக் பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரேஷ்மா ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து தற்போது சில படங்களிலும் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா சமீபத்தில் நடிகர் நரேன் உடன் இணைந்து எடுத்த திருமணம் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த புகைப்படங்களை நடிகர் நரேன் ஒரு வருடத்திற்கு முன்பே தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தாலும் திடீரென இந்த புகைப்படத்தை ரேஷ்மா பதிவு செய்ய என்ன காரணம் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இது குறித்து தற்போது ரேஷ்மா விளக்கம் அளித்துள்ளார். அந்த திருமணம் போட்டோஷூட் உண்மையானது இல்லை என்றும் அது திருமண மேகசீன் ஒன்றுக்கு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார் இதையடுத்து கடந்த சில நாட்களாக நிலவி வந்த வதந்திகள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரேஷ்மா நடித்த ’3.33’ என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதேபோல் வரும் 21ஆம் தேதி அவர் நடித்துள்ள ’சத்திய சோதனை’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.