வித்தியாசமான கெட்டப்பில் நடிகை ரேவதி: எந்த படத்திற்காக தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,April 01 2023]

தமிழ் திரை உலகில் கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபல நடிகையாக இருந்த ரேவதி வித்தியாசமான கெட்டப்பில் பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடித்து இருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய ’மண்வாசனை’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1983 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகர் ரேவதி. அதன் பின்னர் அவர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். மேலும் அஜித் நடித்த ‘ரெட்’, விஜய் நடித்த ‘தமிழன்’ உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ரேவதி தற்போது ’டூத் பாரி’ என்ற இந்தி வெப்தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப்தொடரில் அவருடைய வித்தியாசமான கெட்டப் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

ஷாந்தனு மகேஸ்வரி, தன்யா மணிக்தாலா, ரேவதி உள்பட பலர் நடித்த இந்த வெப்தொடர் நெட்பிளிக்ஸில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

More News

ஜெயம் ரவியின் 'அகிலன்': ஜீ5 ஓடிடியில் ரிலீஸ்..!

ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் தற்போது ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

அதிகரிக்கும் XXB.1.16 கொரோனா பரவல்… ஆபத்தை ஏற்படுத்துமா?

இந்தியா முழுக்க தற்போது உருமாறிய கொரோனா XXB.1.16 வகை தொற்று அதிகளவில் பரவிவருகிறது.

 வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்பட பலர் நடிப்பில் உருவான 'விடுதலை' திரைப்படத்தின் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

ரூ.2500 கோடி மோசடி வழக்கில் தமிழ் நடிகருக்கு தொடர்பா?  போலீஸார் விசாரணை..!

2500 கோடி மோசடி வழக்கில் தமிழ் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 

'இந்தியன் 2' அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்கும் நாடு இதுதான்: கமல் வெளியிட்ட மாஸ் புகைப்படம்..!

 கடந்த சில மாதங்களாக 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதில் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருக்கும் நிலையில்