close
Choose your channels

திருமணம் செய்து கொள்ளுமாறு நடிகையை துப்பாக்கி முனையில் மிரட்டிய இளைஞர் கைது

Monday, May 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவரை இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் தன்னை திருமணம் செய்யுமாறு மிரட்டிய நிலையில் போலீசார் அந்த இளைஞரை மடக்கி பிடித்து கைது செய்தனர்

பிரபல போஜ்புரி நடிகை ரிது சிங். இவர் படப்பிடிப்பு ஒன்றுக்காக உத்தரபிரதேச மாநிலத்திற்கு வந்து அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் படக்குழுவினர்களுடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் இரவு 11 மணிக்கு அவரது அறைக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கியை காட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டினார். இதனையடுத்து நடிகை ரிதுசிங் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு நடிகையை காப்பாற்ற முயன்ற ஒருவரை அந்த இளைஞர் சுட்டார். அவருக்கு கையில் ஏற்பட்டது.

இதனையடுத்து நடிகை ரிதுசிங் அலறல் சத்தம் கேட்டு ஓட்டல் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து சரணடையுமாறு அந்த இளைஞரை எச்சரித்தனர். ஆனால் அந்த இளைஞர் போலீசை நோக்கியும் சுட்டார். இதில் போலீசார் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார். பின்னர் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த இளைஞரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் பெயர் பங்கஜ் என்பது தெரிய வந்தது

இந்த பரபரப்பு காரணமாக ரிதுசிங் உள்பட படக்குழுவினர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் ரிதுசிங் மீளவில்லை என படக்குழுவினர் தெரிவித்தனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.