close
Choose your channels

இனிமேல் நல்ல காலம்தான்: தேர்தலில் வெற்றி பெற்ற பிரபல நடிகை பேட்டி!

Saturday, May 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் இந்த மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. விரைவில் ஜெகன்மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில் நகரி தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியுள்ள பிரபல நடிகை ரோஜா, இம்முறை ஆந்திராவின் அமைச்சராகவும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் வெற்றிக்கு பின்னர் காளிபாக்கம் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடவுளின் ஆசி, கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவால் இரண்டாவது முறையாக நான் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இனி நல்ல காலம் பிறந்து விட்டது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நல்லாட்சியை மீண்டும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி கொண்டு வருவார்' என்று கூறினார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.