close
Choose your channels

பிரபல நடிகை வெற்றி! அமைச்சராகவும் வாய்ப்பு!

Thursday, May 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்த மாநிலங்களில் ஒன்று ஆந்திர பிரதேசம். இந்த மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேச கட்சி மக்களவை மற்றும் சட்டமன்றம் என இரண்டு தேர்தலிலும் படுதோல்வி அடைந்துள்ளது.

ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 141 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை பெற்றிருப்பதால் ஜெகன்மோகன்ரெட்டி முதல்முறையாக அம்மாநிலத்தின் முதல்வராகிறார்.

இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும் தமிழ், தெலுங்கு பட நடிகையுமான ரோஜா நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே அதே தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே பல்வேறு போராட்டங்களை முன்னிலையில் இருந்து நடத்தியுள்ளதால் இவருக்கு ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான அரசில் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.