close
Choose your channels

சினிமாவில் இருந்து விலகுகிறாரா சாய்பல்லவி? இந்த ஒரு காரணம் தான்!

Tuesday, November 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சாய் பல்லவி சினிமாவில் இருந்து விலக இருப்பதாகவும் அவர் தான் படித்த டாக்டர் தொழிலை கவனிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகை சாய்பல்லவி கடந்த 2016 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்த நிலையில் திடீரென அவருக்கு ’பிரேமம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அவர் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தினார்

தமிழில் அவர் ’தியா’ ’மாரி 2’ ’என்ஜிகே’ ’கார்கி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் என்பதும் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கோவையில் தற்போது சாய்பல்லவி ஒரு பெரிய மருத்துவமனையை கட்டி வருவதாகவும் தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு மருத்துவ பணியில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது. தான் படித்த மருத்துவ படிப்பு பொது மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

இருப்பினும் அவர் சினிமாவை விட்டு விலகி விட்டு முழு நேர மருத்துவராகப் பணிபுரியவுள்ளாரா? அல்லது சினிமாவில் நடித்துக்கொண்டே மருத்துவராக பணிபுரியவுள்ளாரா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.