சினிமாவில் இருந்து விலகுகிறாரா சாய்பல்லவி? இந்த ஒரு காரணம் தான்!

  • IndiaGlitz, [Tuesday,November 29 2022]

நடிகை சாய் பல்லவி சினிமாவில் இருந்து விலக இருப்பதாகவும் அவர் தான் படித்த டாக்டர் தொழிலை கவனிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகை சாய்பல்லவி கடந்த 2016 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்த நிலையில் திடீரென அவருக்கு ’பிரேமம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அவர் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தினார்

தமிழில் அவர் ’தியா’ ’மாரி 2’ ’என்ஜிகே’ ’கார்கி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் என்பதும் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கோவையில் தற்போது சாய்பல்லவி ஒரு பெரிய மருத்துவமனையை கட்டி வருவதாகவும் தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு மருத்துவ பணியில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது. தான் படித்த மருத்துவ படிப்பு பொது மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

இருப்பினும் அவர் சினிமாவை விட்டு விலகி விட்டு முழு நேர மருத்துவராகப் பணிபுரியவுள்ளாரா? அல்லது சினிமாவில் நடித்துக்கொண்டே மருத்துவராக பணிபுரியவுள்ளாரா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

More News

அன்லிமிடெட் பாப்கார்ன் வழங்கிய திரையரங்கம்: எவ்வளவு ரூபாய் தெரியுமா?

450 ரூபாய்க்கு எவ்வளவு பெரிய பாத்திரம் கொண்டு வந்தாலும் அந்த பாத்திரம் நிறையும் அளவுக்கு பாப்கார்னை தாய்லாந்து திரையரங்கம் வழங்கி வருகிறது.

சூப்பர்ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தில் கங்கனா ரனாவத்.. இந்த கேரக்டரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் 'சந்திரமுகி 2' திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில்

திருமண வரவேற்பின்போது புகழை விரட்டி விரட்டி அடித்த ரித்திகா: வைரல் வீடியோ

'குக் வித் கோமாளி' போட்டியாளர் ரித்திகா திருமண வரவேற்பு சமீபத்தில் நடந்த நிலையில் அதில் ரித்திகா புகழை விரட்டி விரட்டி அடித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

காமெடி நடிகர் வீட்டு திருமண விழாவில் ரோஜா.. பிரபல நடிகருடன் எதிர்பாராத சந்திப்பு!

 பிரபல நடிகை மற்றும் அரசியல்வாதி ரோஜா சமீபத்தில் காமெடி நடிகர் ஒருவரின் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டபோது அங்கு எதிர்பாராத வகையில் நாகார்ஜுனா மற்றும் அமலா தம்பதியை சந்தித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டதா?

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அவருடைய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நிச்சயம் செய்து விட்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.