எனக்கு இது மட்டும் எப்போதும் இருந்ததில்லை: நாக சைதன்யா திருமணம் குறித்து சமந்தாவின் பதில்..


Send us your feedback to audioarticles@vaarta.com


நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்து, "உங்களுக்கு பொறாமையா?" என்ற கேள்விக்கு நடிகை சமந்தா, "எனக்கு எப்போதும் பொறாமை என்பது என் வாழ்க்கையில் இருந்ததே இல்லை" என்று பதில் அளித்துள்ளார்.
நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பின்னர் நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துளிபாலாவை திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிலையில், சமீபத்தில் நடிகை சமந்தா ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அதில், "உங்களது முன்னாள் கணவர் வேறு ஒரு உறவை தழுவிய போது, எப்போதாவது பொறாமை அடைந்திருக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சமந்தா, "நான் எப்போதும் விலகி இருக்கும் ஒரு விஷயம் என்றால், அது பொறாமை தான். என்னிடம் பொறாமை இருப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எல்லாவற்றையும் விட, பொறாமை மிகவும் மோசமானது என்று தெரியும். அதற்கு மட்டும் என்னிடம் எப்போதும் இடம் இல்லை" என்று தெரிவித்தார்.
மேலும், "ஒரு பெண் திருமணமாகி குழந்தை பெற்றால் மட்டுமே முழுமை அடைவார் என்று இந்த சமூகம் கட்டமைத்து உள்ளது. ஆனால் அதில் எந்த ஒரு உண்மையும் இல்லை. தனிமையிலும் ஒரு பெண் மகிழ்ச்சியாக வாழ முடியும்" என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், நடிகை சமந்தா "சிட்டாடல்" என்ற வெப்தொடரில் நடித்த நிலையில் அடுத்த கட்டமாக, இன்னொரு புதிய வெப்தொடரில் அவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments