close
Choose your channels

'சூரரை போற்று' படம் குறித்து சமந்தா என்ன சொன்னார் தெரியுமா?

Tuesday, December 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ’சூரரை போற்று’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளிவந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஓடிடியில் வெளியான திரைப்படங்களில் இந்தப் படம் தான் மிகப்பெரிய வசூலை குவித்த தமிழ்ப்படம் என்பதும், இந்த படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் போற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இந்த படத்தை பாராட்டாத சினிமா பிரபலங்களே இல்லை என்றும் கூறலாம். இந்த நிலையில் பிரபல தமிழ், தெலுங்கு நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தைப் பார்த்து படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சூர்யா, சுதா கொங்காரா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து இந்த ஆண்டின் மிகச்சிறந்த திரைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்தை பார்த்த பின்னர் எனக்கு தேவையான உத்வேகம் கிடைத்தது என்றும் சமந்தா குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் ’சூரரை போற்று’ படம் குறித்த சமந்தாவின் விமர்சனம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.