close
Choose your channels

பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரியாகிறாரா சமந்தா? ஆச்சரிய தகவல் 

Friday, October 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இன்று 20 ஆவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இதே போல் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 45 நாட்களை கடந்து உள்ளது. இதுவரை தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறு போட்டியாளர்கள் எவிக்சன் ஆகியுள்ளனர் என்பதும் ஒருவர் தானாகவே வெளியேறி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை ஒவ்வொரு சனி ஞாயிறு அன்று கமலஹாசன் தொகுத்து வழங்குவது போல் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார் என்பது தெரிந்ததே. ஆனால் வரும் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களும் படப்பிடிப்பிற்காக அவர் வெளிநாடு செல்ல இருப்பதை அடுத்து இரண்டு நாட்கள் மட்டும் வேறு யாராவது தொகுத்து வழங்குவார்கள் என்று கூறப்பட்டது.

ஏற்கனவே இதே போன்று கடந்த சீசனில் நாகார்ஜுனா வெளிநாடு சென்றபோது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார் என்பதால் இந்த முறையும் அவரிடம் பிக்பாஸ் குழுவினர் அணுகினார். ஆனால் அவருக்கு, படப்பிடிப்பு இருந்த காரணத்தால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் வரும் சனி ஞாயிறு அன்று மட்டும் நடிகையும் நாகார்ஜுனாவின் மருமகளுமான சமந்தா தொகுத்து வழங்குவார் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.