செம்மர கடத்தல் வழக்கு. நடிகை சங்கீதா கைது

  • IndiaGlitz, [Thursday,March 30 2017]

செம்மரக்கடத்தலில் உடந்தையாக இருந்ததாக விமான பணிப்பெண்ணும் முன்னாள் நடிகையுமான சங்கீதா கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கடத்தல் மன்னன் லட்சுமண் என்பவரின் காதலியும் முன்னாள் நடிகையுமான சங்கீதா விமானப்பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார். மேலும் இவர் லட்சுமணின் கடத்தல் மற்றும் ஹவாலா பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சட்டவிரோத பணிகளைக் கொல்கத்தாவிலிருந்தபடி சங்கீதா கவனித்து வந்துள்ளதாக தெரிகிறது.

லட்சுமண் கைது செய்யப்பட்டதும் அவரிடம் செய்த விசாரணையின் அடிப்படையில் ஆந்திர போலீசார் கொல்கத்தாவில் உள்ள சங்கீதாவின் வீட்டில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் செம்மரக்கடத்தல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் கிடைத்ததால் நடிகை சங்கீதா கைது செய்யப்பட்டார்.

இருப்பினும் அவருக்கு கொல்கத்தா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அதன் பின்னர் ஆந்திர நீதிமன்றத்தில் சங்கீதா தொடர்ந்து ஆறு முறை ஆஜராகாததால், நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின்படி ஆந்திர போலீசார் கொல்கத்தா சென்று சங்கீதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 14 நாட்களுக்கு காவலில் வைக்க உத்தரவிட்டார்.

More News

சசிகலாவை ஆதரிக்க ரூ.5 கோடி. கருணாஸ் மீது புலிப்படை நிர்வாகிகள் புகார்

கடந்த சில நாட்களாக முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளை கருணாஸ் நீக்குவதும், நிர்வாகிகள் கருணாஸை நீக்குவதுமான சம்பவங்கள் நடைபெற்று ஊடகங்களுக்கு தீனியை போட்டு வருகின்றன...

அக்சராஹாசனின் துணிச்சலான முடிவு

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் என்பது நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் இதுகுறித்து போதனை செய்யும் திரைப்படம் ஒன்று பாலிவுட்டில் தற்போது தயாராகி உள்ளது...

சமுத்திரக்கனி படத்தில் இருந்து வரலட்சுமி விலக இவர்தான் காரணமா?

சமுத்திரக்கனி இயக்கிய வெற்றிப்படமான 'அப்பா' படத்தின் மலையாள ரீமேக் படமான 'ஆகாஷ் மிட்டாய்' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது...

'விஸ்வரூபம் 2' படத்துக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து, தயாரித்து இயக்கிய 'விஸ்வரூபம்' படத்திற்கு ஏற்பட்ட தடை நாடு அறிந்தது. ஒருசில மத அமைப்புகளும், அன்றைய தமிழக அரசும் மாறி மாறி தடை போட்டது....

புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா. நடிகர் சங்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கை

சமீபத்தில் கூடிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் நடிகர் சங்கத்திற்கு என புதிய்தாக கட்டப்பட்டும் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா மார்ச் 31ஆம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.