close
Choose your channels

பிரபல அரசியல்வாதி மகன் மீது பாலியல் புகார் கூறிய 'பிக்பாஸ் 2' நடிகை!

Monday, December 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு ’பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும், பிரபல தெலுங்கு நடிகையுமான சஞ்சனா என்பவர் தெலுங்கானா மாநிலம் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகன் மீது பாலியல் புகார் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகை சஞ்சனா சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு இரவில் சென்றதாகவும், அப்போது அந்த ஓட்டலுக்கு தெலுங்கானா முன்னாள் எம்எல்ஏ நந்தேஷ்வர் கவுடு என்பவரின் மகன் ஆஷிஷ் கவுடு மற்றும் அவரது நண்பர்கள் சஞ்சனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நடிகை சஞ்சனா போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி ஆஷிஷ் கவுடு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து ஆஷிஷ் கவுடு மற்றும் அவரது நண்பர்களும் திடீரென தலைமறைவாகி உள்ளதாகவும், அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் ஐதராபாத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட பிரியங்கா ரெட்டிக்கு நேர்ந்த கொடுமையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் தான் இந்த ஆஷிஷ் கவுடு. தற்போது அவர் மீதே பாலியல் புகார் கூறப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.