close
Choose your channels

நண்பனை நம்பி ஏமாந்துவிட்டேன்… பணமோசடி புகார் அளித்த பிரபல நடிகை!

Saturday, October 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போதைப்பொருள் வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளிவந்து இருக்கும் கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி தன்னிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக நெருங்கிய நண்பர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை சஞ்சனா கல்ராணி தமிழில் “ஒரு காதல் செய்வீர்“ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது “போடா முண்டம்“ எனும் திரைப்படத்திலும் நடித்துவருகிறார். தற்போது கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் இவர், நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் விற்பனை செய்தது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் பல மாதங்கள் அடைக்கப்பட்ட நடிகை சஞ்சனா தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது தன்னிடம் ரூ.45 லட்சம் பணமோசடி செய்ததாக நெருங்கிய நண்பர் ராகுல் டோன்சே என்பவர் மீது மோசடி புகார் அளித்துள்ளார்.

ராகுல் தன்னிடம் கோவா மற்றும் கொழும்பு பகுதிகளில் உள்ள முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யும்படியும் அந்த நிறுவனங்களில் தான் நிர்வாகப் பதவி வகித்துவருவதாகவும் கூறி தன்னிடம் இருந்து ரூ.45 லட்சத்தை வாங்கிக்கொண்டு அதற்கான வட்டியையும் கொடுக்கவில்லை என்றும் புகார் அளித்திருக்கிறார். மேலும் இதுதொடர்பாக ராகுல் டோன்சே தன்னை மிரட்டியதாகவும் நடிகை சஞ்சனா போலீசில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டாக்சி டிரைவர் ஒருவர், பயண சவாரியின்போது நடிகை சஞ்சனா தன்னை ஆபாசமாக திட்டியதாக புகார் அளித்திருந்தார். இதற்கான விசாரணைக்காக நடிகை சஞ்சனா காவல் நிலையத்திற்கு சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.