30 வயது இளைஞனுடன் சரிகா காதலா? 

  • IndiaGlitz, [Saturday,May 14 2022]

நடிகைகள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசனின் தாயார் சரிகா, 30 வயது இளைஞரை காதலிப்பது போன்ற ஒரு திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் இந்த திரைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமேசான் பிரைமில் நேற்று வெளியான ஆந்தாலஜி திரைப்படம் ’மாடர்ன் லவ் மும்பை’. இதில் 6 குறும்படங்கள் இருக்கிறது என்பதும் ஆறு கதைகளுமே விவகாரமான காதல் கதைகளை கொண்டதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் ஒரு குறும்படத்தில் நடித்துள்ள 60 வயதான சரிகாவை 30 வயதான இளைஞர் ஒருவர் காதலிப்பது போல் உள்ளது. இதனை அறிந்ததும் அந்த இளைஞரை தனியாக கூப்பிட்டு சரிகா கண்டிப்பது போன்ற காட்சிகளும் உள்ளன. ஆனால் அதே நேரத்தில் அந்த இளைஞரை ஏக்கத்துடன் சரிகா பார்ப்பது போன்றும் கதை முடிவடைந்துள்ளது.

இந்த கதைதான் விவகாரமாக இருந்தாலும் ஒரு காட்சியில்கூட விரசமில்லாமல் டீசண்டாக படமாக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் உள்ள ஆறு குறும்படங்களூமே மிக அபாரமாக உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

நீண்ட இடைவெளிக்கு பிறகு சரிகாவை திரையில் பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்ததொடு, மேலும் இதுபோன்ற அதிக திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More News

பிரபல பெண் நடன இயக்குனர் கோவாவில் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் கோவாவில் திடீரென மரணம் அடைந்தது திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

தமிழக முதல்வரிடம் முக்கிய கோரிக்கை வைத்த மோகனின் 'ஹரா' படக்குழுவினர்

கடந்த 80-90களில் 'பயணங்கள் முடிவதில்லை' 'இளமை காலங்கள்' 'மௌனராகம்' உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகர் மோகன் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'ஹரா

அஜித் - ஆதி சந்திப்புக்கு காரணம் இதுதானா?

நடிகர் அஜித் தற்போது 'ஏகே 61' என்ற படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை நடிகர் ஆதி சந்தித்தார் என்ற தகவல் புகைப்படத்துடன் வெளியாகி இணையதளங்களில் வைரலானது

'குக் வித் கோமாளி' ரக்சன் சம்பளம் இவ்வளவா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'குக் வித் கோமாளி. சனி ஞாயிறு எப்போது வரும் என்று பார்வையாளர்கள் காத்திருந்து

இந்த இருவரிடம் இருப்பதை விட தெருநாய்களிடம் பாதுகாப்பாய் இருப்பேன்: சின்மயி

இந்த இருவரிடம் ஒரு அறையில் தனியாக இருப்பதை விட தெரு நாய்களுடன் ஒரு அறையில் தனியாக இருப்பது பாதுகாப்பானது என பாடகி சின்மயி தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.