close
Choose your channels

80-களின் நடிகை சரிதாவிற்கு பிறந்தநாள்… அவரின் இரு மகன்களைப் பார்த்துள்ளீர்களா?

Wednesday, June 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

80 களில் வெளியான பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை சரிதா. அவருக்கு 63 ஆவது பிறந்தநாள் இன்று. இந்நிலையில் அவருடைய சினிமா அனுபவம் குறித்த சிறு தொகுப்பு இதோ-

ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்து வளர்ந்த சரிதா கடந்த 1978 இல் ‘மரோ சரித்ரா‘ எனும் தெலுங்கு சினிமா மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி இருக்கிறார். அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் ‘தப்புத்தாளங்கள்’ எனும் தமிழ் சினிமாவில் நடித்து எண்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அன்றைக்கு முன்னணியில் இருந்த பல நடிகர்களுடன் நடித்த சரிதா பெரும்பாலான பாலசந்தர் இயக்கிய படங்களில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் “தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘அக்னிசாட்சி’, ‘புதுக்கவிதை’ போன்ற திரைப்படங்களில் இவருடைய நடிப்பு பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் 151 திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சரிதா தமிழைத் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக வலம்வந்துள்ளார்.

மேலும் நடிப்பை தவிர சிறந்த டப்பிங் கலைஞராகவும் இருந்துள்ளார். இவர் 80 களில் வெளியான திரைப்படங்களில் டப்பிங் பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை நக்மா, தபு (காதல் தேசம்), சுஷ்மிதா சென், ரம்யா, விஜயசாந்தி, சுஹாசினி, ராதிகா என்று பல முக்கிய நடிகைகளுக்கு தனது இனிமையான குரலால் டப்பிங் பேசியுள்ளார்.

தனது நடிப்பு திறமைக்காக பல மாநில விருதுகள், 7 பிலிம்பேர் விருது, 9 திரைப்பட சங்க விருதுகளை வாங்கியுள்ள நடிகை சரிதா கடைசியாக 2013 இல் வெளியான ‘சிலோன்’ திரைப்படத்திலும் 2014 இல் திரு சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘இனம்’ திரைப்படத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் 2005 இல் வெளியான ‘செல்வி’ எனும் தொலைக்காட்சி தொடரிலும் நடிகை சரிதா நடித்திருந்தார்.

இந்நிலையில் சொந்த வாழ்க்கையைப் பொறுத்த வரைக்கும் நடிகை சரிதா தெலுங்கு நடிகர் வெங்கட சுப்பையாவை கடந்த 1975 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஒரே ஆண்டில் அவரை விட்டு பிரிந்த அவர் பின்பு 12 வருடம் கழித்து 1988 இல் நடிகர் முகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு சிரவன், தேஜாஸ் எனும் இரு மகன்கள் பிறந்தனர்.

இந்நிலையில் 23 வருட திருமண வாழ்க்கைக் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் முகேஷை விட்டு பிரிந்த நடிகை சரிதா தற்போது தனது மகன்களுடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சரிதாவின் இரு மகன்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.