close
Choose your channels

வதந்தியால் எனக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை: பிரபல நடிகை புலம்பல்

Thursday, May 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வதந்தியால் தனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைக்க வில்லை என பிரபல நடிகை ஒருவர் புலம்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையும் தமிழில் ’தலைவி’ என்ற திரைப்படத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கேரக்டரில் நடித்தவருமான கங்கனா ரணாவத் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் ’என்னை பலரும் டாம்பாய் கேர்ள் என்று கூறுகின்றனர் என்றும் தவறு செய்யும் ஆண்களை தட்டிக் கேட்பவர் என்று நினைக்கின்றனர் என்றும் என் வாழ்க்கையில் நான் இதுவரை யாரையும் அடித்தது கூட இல்லை’ என்றும் கூறியுள்ளார். ’என்னைப்பற்றி இது மாதிரி வதந்தி பரப்பப்படுவதால் தான் எனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை கூட கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்து வரும் கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரியவர் என்று அனைவராலும் பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அவருக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை கூட கிடைக்கவில்லை என்று புலம்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.