close
Choose your channels

பேண்ட் அணிந்து புடவை கட்டிய நடிகை சீதா.. வைரலாகும் மாடர்ன் போட்டோஷூட்!

Monday, November 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பேண்ட் அணிந்து அதன் மேல் புடவை அணிந்து அதற்கு மேல் கோட் அணிந்த நடிகை சீதாவின் மாடர்ன் போட்டோஷூட் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பாண்டியராஜன் இயக்கி நடித்த ’ஆண்பாவம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சீதா. அதன் பின்னர் அவர் அர்ஜூன் நடித்த ’சங்கர் குரு’ ரஜினிகாந்த் நடித்த ’குருசிஷ்யன்’, பார்த்திபன் நடித்து இயக்கிய ’புதிய பாதை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

புதிய பாதை படத்தில் நடிக்கும்போது பார்த்திபனுடன் காதல் ஏற்பட்டதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார் என்பதும், திருமணமான 11 வருடங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகை சீதா அம்மா வேடங்களில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே., இந்த நிலையில் நடிகை சீதா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகும். குறிப்பாக இவ்வாறு மாடி தோட்டம் குறித்த பல புகைப்படங்களை பதிவு செய்வார்.

இந்த நிலையில் சற்று முன் நடிகை சீதா பேண்ட் அணிந்து, அதற்கு மேல் புடவை அணிந்து அதன் மேல் ஓவர்கோட் போட்டுள்ள மாடர்ன் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு நடிகை வனிதா விஜயகுமார் உள்பட பலர் லைக்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.