பேண்ட் அணிந்து புடவை கட்டிய நடிகை சீதா.. வைரலாகும் மாடர்ன் போட்டோஷூட்!

  • IndiaGlitz, [Monday,November 28 2022]

பேண்ட் அணிந்து அதன் மேல் புடவை அணிந்து அதற்கு மேல் கோட் அணிந்த நடிகை சீதாவின் மாடர்ன் போட்டோஷூட் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பாண்டியராஜன் இயக்கி நடித்த ’ஆண்பாவம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சீதா. அதன் பின்னர் அவர் அர்ஜூன் நடித்த ’சங்கர் குரு’ ரஜினிகாந்த் நடித்த ’குருசிஷ்யன்’, பார்த்திபன் நடித்து இயக்கிய ’புதிய பாதை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

புதிய பாதை படத்தில் நடிக்கும்போது பார்த்திபனுடன் காதல் ஏற்பட்டதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார் என்பதும், திருமணமான 11 வருடங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகை சீதா அம்மா வேடங்களில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே., இந்த நிலையில் நடிகை சீதா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகும். குறிப்பாக இவ்வாறு மாடி தோட்டம் குறித்த பல புகைப்படங்களை பதிவு செய்வார்.

இந்த நிலையில் சற்று முன் நடிகை சீதா பேண்ட் அணிந்து, அதற்கு மேல் புடவை அணிந்து அதன் மேல் ஓவர்கோட் போட்டுள்ள மாடர்ன் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு நடிகை வனிதா விஜயகுமார் உள்பட பலர் லைக்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

கணவனை 22 துண்டுகளாக வெட்டி வீசிய மனைவி… ஏன் இந்தத் தண்டனை தெரியுமா?

டெல்லியில் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய ஷரத்தா வாக்கர் எனும் இளம் பெண்ணை அவரது காதலர் அப்தாப் அமீன்

ராம் சரண் தேஜாவின் அடுத்த பான் - இந்தியா திரைப்படம் அறிவிப்பு!

 பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா, இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' என்ற பான் - இந்தியா திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள

தனுஷின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு: இயக்குனர் , தயாரிப்பாளர் யார்?

பிரபல நடிகர் தனுஷ், பிரபல இயக்குனர் சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணையும் மும்மொழி படம் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது.

திருமண வாழ்வில் 10வது ஆண்டை கொண்டாடும் பிரபல நடன ஜோடி !!

பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர்  மற்று லலிதா ஷோபி மாஸ்டர் திருமண வாழ்க்கையில் 10 வது ஆண்டை கடந்திருக்கிறார்கள். திரையுலகில் நடன இயக்குனர்களாக பலருக்கு முன்னுதாரமாக இருக்கும்

'உங்ககிட்ட பேசறதுக்கே எல்லாரும் யோசிக்கிறாங்க'.. ஏடிகே சொன்னது யாரை?

உங்க கிட்ட பேசுறதுக்கு நிறைய பேரு யோசிக்கிறாங்க என ஏடிகே நாமினேஷன் செய்யும்போது போட்டியாளர் ஒருவரை கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.