close
Choose your channels

நடிகை ஷெரினுக்கு கொரோனா என்பது பொய்யான தகவலா? 

Saturday, August 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஷெரின் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது என்பதும் இதனை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்திருந்தார் என்பதும் தெரிந்ததே. மேலும் தான் மருத்துவரின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் இரண்டு முறை தொடர்ச்சியாக பரிசோதனை செய்ததில் தனக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்திருப்பதாகவும் இதனையடுத்து தனது டாக்டர் முதலில் பரிசோதனை செய்த பாசிட்டிவ் என்பது பொய்யான தகவலாக இருக்கலாம் என்றும் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 16 ஆம் தேதி பரிசோதனை செய்தபோது பாசிடிவ் என்றும் 17ஆம் தேதி பரிசோதனை செய்த போது நெகட்டிவ் என்றும் ரிசல்ட் வந்த போதே தனக்கு சந்தேகமாக இருந்ததாகவும் இதனை அடுத்து தற்போது எடுக்கப்பட்டுள்ள ரிசல்ட்களிலும் நெகட்டிவ் என்று தான் வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தான் பாதுகாப்பிற்காக ஒரு சில நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனாவில் இருந்து குணமாக வாழ்த்திய அனைவருக்கும் தனது நன்றியை நடிகை ஷெரின் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.