close
Choose your channels

ஷில்பா ஷெட்டியும் கைதாக வாய்ப்பா? மும்பை போலீஸார் சொல்வது என்ன?

Thursday, July 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா என்பவர் ஆபாச படம் தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சமீபத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பதும் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ராஜ் குந்த்ரா ஆபாச பட விவகாரத்தில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஏற்கனவே போலீஸார் விசாரணை செய்தனர் என்பதும் இதுவரை நடந்த விசாரணையில் அவருக்கு ஆபாச பட விவகாரத்தில் தொடர்பு இல்லை என்று தெரியவந்ததாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்

இருப்பினும் ராஜ்குந்த்ராவுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்த வங்கி கணக்கையும் அதிலிருந்து ஷில்பா ஷெட்டியின் நிறுவனத்திற்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்கையும் ஆய்வு செய்து வருவதாகவும் இந்த ஆய்வில் ஷில்பா ஷெட்டிக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்தால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்

ஷில்பா ஷெட்டி குற்றமற்றவர் என்ற நற்சான்று வழங்க முடியாது என்றும் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்த பின் அவருக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்தால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மும்பை போலீசார் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.