close
Choose your channels

ஒற்றை புகைப்படத்தால் சர்ச்சையில் மாட்டிக்கொண்ட நடிகை ஸ்ரேயா சரண்!

Tuesday, September 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி” படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண். தமிழில் “உனக்கு 20 எனக்கு 18” எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதற்குப் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து சினிமா துறையில் பிரபலமானார். அதேபோல தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் எனப்பல மொழி சினிமாக்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யா நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குறைவான படங்களில் நடித்துவரும் நடிகை ஸ்ரேயா தனது கணவருடன் வெளிநாடுகளுக்குச் செல்வது அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொள்வது என சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாகச் செயல்பட்டு வந்தார்.

மேலும் இவர் பதிவிடும் அனைத்துப் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வந்தன. அந்த வகையில் இன்று திருப்பதி தேவஸ்தானத்தில் தரிசனம் செய்த நடிகை ஸ்ரேயா மற்றும் அவரது கணவர் ஆண்ட்ரோ இருவரும் தரிசனத்திற்குப் பிறகு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளனர். அப்போது கோவில் வாசலில் நின்றுகொண்டு முகக்கவசம் அணியாமல் நடிகை ஸ்ரேயாவின் கணவர் தனது மனைவிக்கு முத்தம் கொடுக்கிறார். இந்தப் புகைப்படம்தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தில் நின்று கொண்டு இப்படி செய்யலாமா? என நடிகை ஸ்ரேயாவை சிலர் விமர்சித்து வரும் நிலையில் இது அவர்களுடைய “தனிப்பட்ட சுதந்திரம்“ என்று நடிகைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தில் நடிகை ஸ்ரேயா அவரது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் விமர்சனத்திற்கு இடையே படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரேயா தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.