close
Choose your channels

சிம்ரனின் இரண்டாவது மகனா இவர்? புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்..!

Tuesday, March 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சிம்ரனின் இரண்டாவது மகனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளதை அடுத்து இது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். சிம்ரனின் இரண்டாவது மகன் இவ்வளவு பெரியவர் ஆகிவிட்டாரா என ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் சிம்ரன் என்பதும் இவர் அஜித், விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்களுடன் நடித்தார் என்பது தெரிந்ததே. தற்போது கூட அவர் ’துருவ நட்சத்திரம்’ ’வணங்காமுடி’ ’அந்தகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிசியான நடிகையாக உள்ளார்.

இந்த நிலையில் நடிகை சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு தனது பள்ளிக்காலத் தோழர் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தீபக்-சிம்ரன் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சிம்ரன் தனது இரண்டாவது மகனான ஆதித் வீர் என்பவரின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் வீடியோவாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் பார்த்து சிம்ரனின் இரண்டாவது மகனே இவ்வளவு பெரியவர் ஆகிவிட்டாரா என ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை சிம்ரன் தனது மகனுக்கு கூறிய பிறந்தநாள் வாழ்த்தில், ’மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கி, உங்கள் வழியில் வரும் அனைத்து வாய்ப்புகளையும் அரவணைத்துக்கொள்ள இதோ மற்றொரு ஆண்டு. எனது வீர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.