தடுப்பூசி போட்டு கொண்டபின் பிரபல நடிகை கூறியது இதுதான்!

  • IndiaGlitz, [Thursday,May 06 2021]

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் மட்டும் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திரையுலக பிரபலங்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தடுப்பூசியின் அவசியத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் விஜய் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை சிம்ரன் தற்போது முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதில் அவர் கூறியதாவது: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக நோய்த்தொற்று பாதிக்கப்படாமல் கவனத்துடன் இருக்க வேண்டு. மேலும் குழந்தைகளை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்கு தடுப்பூசி சிறந்த வழி. எனக்கு முதல் தடுப்பூசி கிடைத்ததால் நான் போட்டுக் கொண்டேன். அதே போல் நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் தயவுசெய்து உடனடியாக தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள்’ என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்

More News

'வெல்கம் டு 20s கிளப்: ஷிவானி அம்மாவுடன் பாலாஜியின் செல்பி புகைப்படம் வைரல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய ஷிவானி நாராயணன் நேற்று தனது 20 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறித்த செய்தியைப் பார்த்தோம்

சொன்னதை செய்யுங்கள்: வெற்றி பெற்ற வானதி சீனிவாசனிடம் அஜித் ரசிகர்கள் கோரிக்கை!

கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசனை தோற்கடித்த பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம் அஜித் ரசிகர்கள் 'சொன்னதை செய்யுங்கள்' என கேட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்றுக்கு பலியான 'ஆட்டோகிராப்' பாடகர்: திரையுலகினர் அதிர்ச்சி!

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவுக்கு பலி: தீவிர சிகிச்சை பிரிவில் மனைவி!

கடந்த சில நாட்களாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் சிலர் கொரோனாவால் உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் சற்று முன் நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவுக்கு

தமிழகத்தில் ஊரடங்கு....!புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன..?

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.