தமிழ்நாட்டில் இப்போதுதான் பிரச்சனை தொடங்கியுள்ளது. நடிகை ஸ்ரீபிரியா

  • IndiaGlitz, [Friday,February 17 2017]

தமிழகத்தின் 13வது முதல்வராக நேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். அவருடன் சேர்ந்து 31 அமைச்சர்களும் பதவியேற்றனர். நாளை கூடவுள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, மக்களின் மனதை அவர் இன்னும் வெல்லவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் இந்த ஆட்சிக்கு எதிராக ஏகப்பட்ட கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருவதில் இருந்து தெரிகிறது. முதல்வர் சுயமாக செயல்பட மாட்டார் என்றும் அவரை பின்னணியில் உள்ள சக்திதான் இயக்கும் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகை ஸ்ரீபிரியா தனது சமூக வலைத்தளத்தில், 'தேசிய ஊடகங்கள் தமிழ்நாட்டில் அரசியல் பிரச்னைகள் முடிந்துவிட்டதாக செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் இப்போது தான் பிரச்சனை தொடங்கியுள்ளது என்பது அவர்களுக்கு புரியாது. தமிழக மக்களாவது இதை புரிந்து கொண்டு தங்களுக்கு யார் முதல்வராக வர வேண்டும் என்று தங்களுடைய எம்.எல்.ஏக்களிடம் பேச வேண்டும்' என்று கூறியுள்ளார்.

மேலும் எம்எல்ஏக்கள் ஓட்டு கேட்டுவரும் போது கைகளை கட்டிக்கொண்டு பதவிக்காக ஓட்டு கேட்கின்றனர். ஆனால் மக்கள் தங்களின் கடமையை செய்ய வேண்டிய நேரம் இது. மக்கள் அனைவரும் அவரவர் தொகுதி எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு தமிழ்நாட்டை காப்பாற்ற அவர்களிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.

More News

பத்தாம் வகுப்பை கூட பாஸ் செய்யாத சசிகலா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக முதல்வராக பதவியேற்று மக்களின் மனங்களை வென்ற ஓபிஎஸ் அவர்களை திடீரென ராஜினாமா செய்ய வைத்து, முதல்வர் பதவியில் அமர முயன்ற சசிகலாவுக்கு விதி ஜெயில் பாதையை வழிகாட்டிவிட்டது. இதனால் அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தற்போது முதல்வராகியுள்ளார்...

சனிக்கிழமை கூடுகிறது சட்டமன்றம். பெரும்பான்மை கிடைக்குமா?

தமிழக முதல்வராக இன்று மாலை பொறுப்பேற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 15 நாள் அவகாசம் கவர்னர் கொடுத்திருந்த போதிலும் வரும் சனிக்கிழமையே சட்டமன்றத்தை அவர் கூட்டி நம்பிக்கை வாக்கு கோரப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அடுத்த 4 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் சிறை ஆட்சி. மார்க்கண்டேய கட்ஜூ வேதனை

தமிழகத்தின் முதல்வர் பதவியை கைப்பற்ற தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்த சசிகலாவுக்கு கடைசியில் கிடைத்தது ஜெயில் தண்டனைதான்.

பதவியேற்ற பத்து நிமிடத்தில் வன்முறை. ஓபிஎஸ் வீடு மீது கல்வீச்சு

சசிகலா ஆதரவு அணியின் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு கவர்னரின் அழைப்பின் பேரில் கடந்த சில மணி நேரங்களுக்கு முதல்வராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற சில நிமிடங்களில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும்,

மக்களின் மனதை வெல்வாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி?

கடந்த சில நாட்களாக ஆட்சி அமைப்பது யார்? என்ற குழப்பத்திற்கு இன்று விடை கிடைத்துள்ளது.