close
Choose your channels

பிரபல தமிழ்ப்பட நடிகைக்கு பெண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்

Thursday, September 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆரி நடித்த ’நெடுஞ்சாலை’, கலையரசன் நடித்த ’அதே கண்கள்’, உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷிவேதா. இவர் சமீபத்தில் தனது நீண்டநாள் காதலரான முரளிகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை ஷிவேத கர்ப்பமான நிலையில் தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஷிவேதாவுக்கு கடந்த ஜூலை 20ஆம் தேதியே குழந்தை பிறந்திருந்தாலும் அவர் தற்போதுதான் இந்த தகவலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிவேதாவின் பெண் குழந்தைக்கு ‘அருந்ததி’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஷிவேதாவுக்கும் அருந்ததிக்கும் உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் திரையுலக நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஷிவேதா தற்போது பாபி சிம்ஹா நடித்த ’வல்லவனுக்கு வல்லவன்’, எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் இரவைக்காலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.