close
Choose your channels

தெருநாய்களுக்காக ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய பிரபல நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்!

Tuesday, November 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மனிதர்களுக்கு விபத்துக்கள் நேர்ந்தால் உடனடியாக ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவது போல், தெரு நாய்களுக்கும் ஆம்புலன்ஸ் சேவையை பிரபல நடிகை ஒருவர் தொடங்கியிருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஏற்கனவே 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி சத்தமில்லாமல் ஏராளமான சமூக சேவைகளை அவர் செய்து வருகிறார்

இந்த நிலையில் விலங்குகள் நல அமைப்பு ஒன்றுடன் இணைந்து தெரு நாய்களை பாதுகாக்க ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை தொடங்கியுள்ளார் சன்னிலியோன். சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் சேர்ந்து இந்த ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி உள்ளனர் என்றும் தெருநாய்கள் கொடூரமாக தாக்கப்படும் போதும் விபத்துக்களில் சிக்கி காயமடைந்த போதும் இந்த ஆம்புலன்ஸ் மூலம் அந்த நாய்களின் உயிர்கள் காப்பாற்றப் படவேண்டும் என்பதற்காக இந்த சேவையை ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி இருப்பதாகவும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார்
இதன் மூலம் தெரு நாய்களுக்கு உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என தான் நம்புவதாகவும் சன்னிலியோன் மற்றும் அவரது கணவர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.