close
Choose your channels

விஜய்யின் 'தெறி' படத்தில் நடித்த நடிகைக்கு கொரோனா: 

Monday, May 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் நடித்த நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’தெறி’. இந்த படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்திருந்தவர் பிரபல நடிகை சுனைனா என்பது தெரிந்ததே. மேலும் இவர் ’காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் என்பதும் அதன் பிறகு ’மாசிலாமணி’ ’வம்சம்’ ’திருத்தணி’ ’சமர்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் நடிகை சுனைனா தெரிவித்துள்ளார். தான் கடந்த சில நாட்களாக தனது குடும்பத்தினர்களுடன் மட்டும் தான் தொடர்பில் இருந்ததாகவும் அதனால் குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபடும் வரை அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தான் ஓய்வு கொடுத்துள்ளதாகவும் அனைவரும் கவனமுடன் இருங்கள் என்றும் மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள் என்றும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன் என்றும் சுனைனா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.