சம்பளத்தில் நயன்தாராவை மிஞ்சிய நடிகை: எத்தனை கோடி தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,June 08 2022]

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தான் தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் நயன்தாராவை மிஞ்சும் அளவுக்கு நடிகை ஒருவர் தற்போது அதிக சம்பளம் வாங்கி வருவதாக திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது. அவர் நாயகி ’பீஸ்ட்’ நாயகி பூஜா ஹெக்டே.

நடிகை பூஜா ஹெக்டே நடித்த ’ஆச்சார்யா’ மற்றும் ’ராதே ஷ்யாம்’ ஆகிய இரண்டு படங்களும் சுமாரான வசூல் செய்தது. விஜய்யுடன் பூஜா நடித்த ’பீஸ்ட்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று கூற முடியாது. இருப்பினும் தமிழ் தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களின் விரும்பத்தக்க நடிகையாக பூஜா ஹெக்டே உள்ளார் என்றும் அதனால்தான் அவருக்கு சம்பளம் உயர்ந்து கொண்டே வருகிறது என்றும் கூறப்படுகிறது.

தற்போது அவர் ’சர்க்கஸ்’ என்ற பாலிவுட் படத்திலும் ’ஜன கன மன’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்கள் வெற்றி பெற்றால் அவருடைய சம்பளம் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தென்னிந்திய திரையுலகை பொறுத்தவரை நயன்தாரா 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வரும் நிலையில் பூஜா ஹெக்டே 5கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இதைவிட இன்னும் சம்பளம் கொடுக்க ஒரு சில தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

More News

கோடியில் புரளும் கால்பந்து வீரரின் டிஸ்ப்ளே உடைந்த மொபைல்: என்ன காரணம் தெரியுமா?

தற்போது நடுத்தர வர்க்கத்தினர் கூட மொபைல் போனில் டிஸ்ப்ளே உடைந்துவிட்டால் உடனே அந்த மொபைல் போனை தூக்கி போட்டு விட்டு புதிய மொபைல் போனை வாங்கி கொண்டிருக்கும்

ரூ.3.50 கோடி சம்பளம் உள்ள வேலையை உதறிய இளைஞர்: காரணம் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!

3.50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென வேலையை விட்டு வெளியேறியதும், அதற்கான காரணத்தை அவர் கூறியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அப்ப சூர்யா ரோலக்ஸ் இல்லையா? அதிர்ச்சி தகவல்

உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் 200 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

'அந்த இரண்டு படங்கள் போல் எதிர்பார்க்க வேண்டாம்': நயன்தாரா அடுத்த பட இயக்குனரின் பதிவு

தனது முந்தைய இரண்டு படங்களை போல் இந்த படத்தை எதிர்பார்க்க வேண்டாம் என நயன்தாராவின் அடுத்த படத்தை இயக்கிய இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

'விக்ரம்' படம் பார்த்து ஷங்கர் என்ன சொன்னார் தெரியுமா?

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் இருந்து வெளியான 'கேஜிஎப் 2' மற்றும் 'ஆர்.ஆர்.ஆர்' ஆகிய திரைப்படங்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில்