கணவரையே இரண்டாவது முறை திருமணம் செய்து கொண்ட 'லப்பர் பந்து' நடிகை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


‘லப்பர் பந்து’ படத்தில் நடித்த நடிகை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது கணவரையே இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘லப்பர் பந்து’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது. இந்த நிலையில், இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை சுவாசிகா நடித்திருந்தார். அவரது கேரக்டர் அனைவரின் பாராட்டுக்கும் உரியதாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கேரளாவை சேர்ந்த சின்னத்திரை நடிகர் பிரேம் ஜேக்கப் என்பவரை நடிகை சுவாசிகா கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவேறிய நிலையில், தற்போது தனது கணவரையே அவர் இந்து முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
"இந்து முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையை பூர்த்தி செய்துள்ளேன். இதை ஒரு சூட்டிங் போல நடத்தினாலும், இருவருக்கும் உண்மையான திருமண உணர்வு ஏற்பட்டது," என்று சுவாசிகாவின் கணவர் பிரேம் ஜேக்கப் கூறியுள்ளார்.
முதலாவது திருமண நாளிலேயே தனது கணவரை மீண்டும் திருமணம் செய்து கொண்ட நடிகை சுவாசிகாவின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments