close
Choose your channels

சிறையிலிருந்து வெளியே வந்த நடிகையுடன் காதல்: ஆசிட் வீசுவதாக மிரட்டியவர் கைது 

Saturday, February 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் நடிகை ஸ்ருதி மற்றும் அவருடைய தாயார் சித்ரா ஆகிய இருவரும் போலியாக மேட்ரிமோனியல் நடத்தி அதன் மூலம் பலரிடம் பண மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த நடிகை ஸ்ருதியை ஒருதலையாக காதலித்த தொழிலதிபர் ஒருவரின் மகன் அவரை திருமணம் செய்து வைக்காவிட்டால் ஆசிட் ஊற்றி விடுவேன் என்று மிரட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார்

நடிகை ஸ்ருதியை பள்ளி படிக்கும் காலத்திலிருந்து ஒருதலையாக காதலித்து வந்தவர் அவனது தூரத்து உறவினரான அமுதன் என்ற வாலிபர். ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவரின் மகனான இவர் கடந்த பல ஆண்டுகளாக நடிகை ஸ்ருதியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவருடைய தாயிடம் வலியுறுத்தி வருகிறார். ஆனால் நடிகை ஸ்ருதி மற்றும் அவரது தாய் சித்ரா இருவரும் மறுத்து வந்தனர்

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போலி மேட்ரிமோனியல் நடத்தி செய்த மோசடியால் நடிகை ஸ்ருதி மற்றும் அவருடைய தாய் சிறையில் அடைக்கப்பட்டனர் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் ஸ்ருதியை மீண்டும் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஆசிட் ஊற்றி விடுவேன் என்று அமுதன் மிரட்டியதாக தெரிகிறது. இதற்கு அவருடைய தந்தையும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஸ்ருதி மற்றும் அவரது தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அமுதன் மற்றும் அவருடைய தந்தை ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.