சிறையிலிருந்து வெளியே வந்த நடிகையுடன் காதல்: ஆசிட் வீசுவதாக மிரட்டியவர் கைது 

  • IndiaGlitz, [Saturday,February 29 2020]

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் நடிகை ஸ்ருதி மற்றும் அவருடைய தாயார் சித்ரா ஆகிய இருவரும் போலியாக மேட்ரிமோனியல் நடத்தி அதன் மூலம் பலரிடம் பண மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த நடிகை ஸ்ருதியை ஒருதலையாக காதலித்த தொழிலதிபர் ஒருவரின் மகன் அவரை திருமணம் செய்து வைக்காவிட்டால் ஆசிட் ஊற்றி விடுவேன் என்று மிரட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார்

நடிகை ஸ்ருதியை பள்ளி படிக்கும் காலத்திலிருந்து ஒருதலையாக காதலித்து வந்தவர் அவனது தூரத்து உறவினரான அமுதன் என்ற வாலிபர். ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவரின் மகனான இவர் கடந்த பல ஆண்டுகளாக நடிகை ஸ்ருதியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவருடைய தாயிடம் வலியுறுத்தி வருகிறார். ஆனால் நடிகை ஸ்ருதி மற்றும் அவரது தாய் சித்ரா இருவரும் மறுத்து வந்தனர்

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போலி மேட்ரிமோனியல் நடத்தி செய்த மோசடியால் நடிகை ஸ்ருதி மற்றும் அவருடைய தாய் சிறையில் அடைக்கப்பட்டனர் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் ஸ்ருதியை மீண்டும் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஆசிட் ஊற்றி விடுவேன் என்று அமுதன் மிரட்டியதாக தெரிகிறது. இதற்கு அவருடைய தந்தையும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஸ்ருதி மற்றும் அவரது தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அமுதன் மற்றும் அவருடைய தந்தை ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

More News

இன்ஸ்டாகிராமில் வீடியோ அனுப்பியதால் ஒரு மணி நேரத்தில் ரூ.59 ஆயிரம் இழந்த மாணவர்!

நண்பருக்கு வீடியோ அனுப்பியதால் ஒரு மணி நேரத்தில் ரூபாய் 59 ஆயிரம் இழந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ரஜினி, கமல் இணைந்தால் யாருக்கு பாதிப்பு: அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் இணையவுள்ளதாகவும், இதனையடுத்து அடுத்த ஆண்டு நடைபெறும்

சென்னையில் இந்தியாவின் முதல் நடமாடும் டீக்கடை: பிரபல நடிகர் திறந்த வைத்தார்

சென்னை கோடம்பாக்கத்தில் இந்தியாவில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே நடத்தும் நடமாடும் டீக்கடையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரபல நடிகர் நாசர் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார்.

OLX மூலம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி.. தீரன் படம் போல் முகாமிட்டு பிடித்த தமிழக போலீஸ்..!

ராணுவ அதிகாரி எனக்கூறி பொருட்களை விற்பனை செய்யும் தளமான OLX மூலமாக பொருட்களை விற்பதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் இந்தியா முழுவதும் மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் – அரசியல் வியூகம், அரியணை யாருக்கு??? 

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று மூத்த தலைமைகளை களம் கண்ட தமிழகத்தின் முதலமைச்சர் அரியாசனத்தை அடுத்து யார் பிடிக்கப் போகிறார்?