close
Choose your channels

போதை மருந்து தயாரிக்கிறதே உங்க ஊர்ல தான்: கங்கனாவுக்கு கமல் பட நடிகை பதிலடி!

Wednesday, September 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போதைப்பொருள் தயாரிப்பதே உங்க ஊரில் தான் என்றும் அதை முதலில் சுத்தப்படுத்திவிட்டு அதன் பிறகு மும்பைக்கு வாருங்கள் என்றும் கங்கனாவுக்கு கமல் பட நடிகை பதிலடி கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று கொண்டிருப்பவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். குறிப்பாக சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக போதை மருந்து கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார்.

மேலும் பாலிவுட் திரையுலகில் உள்ள பலரும் போதை பழக்கத்திற்கு உள்ளானவர்கள் என்றும் அவர்களிடம் விசாரணை செய்தால் அனைவரும் சிறையில் கம்பி எண்ண செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கமல் நடித்த ‘சாணாக்யன்’ மற்றும் ’இந்தியன்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஊர்மிளா கங்கனாவின் குற்றச்சாட்டு குறித்து கூறிய போது, ’போதைப் பொருளின் பிறப்பிடமே கங்கனா ரனாவத்தின் சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசம் தான் என்றும், அங்குதான் போதைப் பொருளே உற்பத்தி செய்யப்படுகிறது என்றும், முதலில் கங்கனா தனது சொந்த மாநிலத்தை சுத்தப்படுத்தி விட்டு அதன் பின்னர் மும்பைக்கு வரட்டும்’ என்று கூறியுள்ளார்.

மும்பை அனைவருக்கும் சொந்தமான நகரம் என்பதில் சந்தேகமே இல்லை என்றும், மும்பையின் மகளான என்னால் அந்த நகரத்திற்கு எதிரான அவமதிப்பு கருத்துகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், மும்பைக்கு எதிராக ஒரு கருத்தை சொன்னால், அது அந்நநகர மக்கள் அனைவரையும் அவமரியாதை செய்வதற்கு சமம்’ என்றும் ஊர்மிளா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos