10 வருடங்கள் ஆகியும் இன்னும் நிறுத்த முடியவில்லை.. நடிகை வனிதாவின் உருக்கமான பதிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை வனிதாவின் தாயாரும் பழம்பெரும் நடிகையுமான மஞ்சுளாவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் தனது தாயாரின் பிறந்தநாளில் உருக்கமான பதிவை நடிகை வனிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
எம்ஜிஆர், சிவாஜி உடன் பல திரைப்படங்களில் நடித்தவரும் நடிகர் விஜயகுமாரின் மனைவியுமான மஞ்சுளாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவரது நினைவுகளை சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் விஜயகுமார்- மஞ்சுளாவின் மகளான வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.. பத்து வருடங்கள் ஆகியும் இன்னும் உன்னை பற்றி நினைப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை. நீ எனக்கு கற்றுக் கொடுத்த அனைத்தையும் ஞாபகம் வைத்துள்ளேன். உன்னை போலவே நானும் வளர்கிறேன்.
எனது ஸ்கிரீன் சேவரில் இருந்து வால்பேப்பர் வரை அனைத்தும் நீங்கள் தான் இருக்கிறீர்கள். என்னை சுற்றி நீங்கள் எப்போதும் இருக்கிறீர்கள், உங்களை நான் ஒரு நாள் சந்திக்கிறேன், அதுவரை எனது அன்பு’ என்று பதிவு செய்துள்ளார். வனிதாவின் இந்த உருக்கமான பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments