close
Choose your channels

என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையா? நடிகை வரலட்சுமி விளக்கம்..!

Tuesday, August 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வரலட்சுமியிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கேரளாவின் விழிஞ்சம் கடற்கரைப் பகுதியில் சுமார் 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே 47 பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கம் என்பவர் வரலட்சுமி உதவியாளராக இருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதனை அடுத்து நடிகை வரலட்சுமி விசாரணைக்கு ஆஜராகுமாறு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது. இந்த செய்திக்கு தற்போது நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியதாவது:

எனக்கும் ஆதிலிங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என்னிடம் வேலை பார்த்த ஆதிலிங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வேலையிலிருந்து நின்றுவிட்டார். ஆதிலிங்கம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் எனது தாயார் இடத்தில் மட்டுமே விசாரணை செய்தனர். விசாரணைக்கு என்னை யாரும் அழைக்கவில்லை' என்று விளக்கம் அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.