சிக்னலில் புத்தகம் விற்கும் பெண்ணுடன் செல்பி எடுத்த நடிகை: வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Sunday,September 11 2022]

சென்னை சாலையில் சிக்னலில் புத்தகம் விற்கும் பெண்ணுடன் தமிழ் நடிகை ஒருவர் செல்பி எடுத்து அதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சாந்தனு நடித்த ‘சக்கரக்கட்டி, அருண் விஜய் நடித்த ’மலை மலை’, பாலா இயக்கிய ’பரதேசி’, வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடிக்கவில்லை என்றாலும் தற்போது பிரபுதேவா நடித்து வரும் ’வினோதன்’ என்ற தமிழ் படம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் தமிழ் பட படப்பிடிப்பிற்காக சென்னை வந்துள்ள வேதிகா காரில் சென்று கொண்டிருக்கும் போது சிக்னலில் புத்தகம் விற்கும் பெண்ணுடன் செல்பி எடுத்து அவர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.மேலும் அந்த பெண்ணிடம் சில புத்தகங்களையும் அவர் வாங்கி உள்ளதாக தெரிகிறது. இது குறித்த வீடியோவை நடிகை வேதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

More News

சூர்யாவின் 'வணங்கான்' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'வணங்கான்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்தது என்பதும் இதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே 

'பொன்னியின் செல்வன்' டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் திரையுலகினர்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில்

'எத்தனை பேருடா இப்படி கிளம்பியிருக்கிங்க'.. ரசிகரின் கேள்வியால் கடுப்பான சீரியல் நடிகை ரேஷ்மா!

சீரியல் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தபோது ஒரு ரசிகர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா? என்ற கேள்வியை கேட்டதற்கு கடுப்பாகி,

'கோப்ரா' நிலைமை தெரிந்தும் 3 மணி நேர படத்தை வெளியிடும் பிரபல இயக்குனர்: என்ன ஆகும்?

சமீபத்தில் வெளியான விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான 'கோப்ரா' திரைப்படம் மூன்று மணி நேரம் என்ற நீண்ட ரன்னிங் டைம் கொண்ட படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி

கேம் செயலி மூலம் நூதன மோசடி: கோடிக்கணக்கில் பணத்தை கைப்பற்றிய அமலாகத்துறை!

கேம் செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து ரூ.17 கோடி பணத்தை கைப்பற்றியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.