காயத்ரி ரகுராம் மீது நடிகை விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு!

விஜய், சூர்யா இணைந்து நடித்த ’பிரண்ட்ஸ்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி தற்கொலைக்கு முயன்றார்.

தனது மரணத்திற்குப் பின் சீமான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் முகநூல் நேரலையில் தெரிவித்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் விஜயலட்சுமியின் உறவினர்கள் அவரை காப்பாற்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவரது உடல் தேறி வருவதாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் விஜயலட்சுமி தன்னை மருத்துவமனையில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டதாக குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். தனக்கு மூச்சுவிடவே மூச்சு விடவே சிரமமாக இருக்கும் நிலையிலும் மருத்துவமனையில் இருந்து என்னை வெளியேற்றி விட்டார்கள் என்றும் என்னை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றியதற்கான காரணம் எனக்கு புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் எனக்கு பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை என்றும் நான் நாடகம் எதுவும் போடவில்லை என்று கூறிய விஜயலட்சுமி, காயத்ரி ரகுராம் என் அனுமதி இல்லாமல் என்னை டிஸ்சார்ஜ் செய்ய வைத்துள்ளார் என்றும் அன்று தனக்கு ஆதரவாக இருந்த காயத்ரி ரகுராம் தற்போது என்னுடன் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்

காயத்ரி ரகுராம் மீது திடீரென நடிகை விஜயலட்சுமி வைத்துள்ள பகீர் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

புதிய சுற்றுச்சூழல் விதிகள் குறித்து நடிகர் கார்த்தியின் ஆக்கபூர்வமான பதிவு!

சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த புதிய சுற்றுச்சூழல் விதி குறித்து கடும் எதிர்ப்புகளை அரசியல் தலைவர்கள் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் உழவன் பவுண்டேஷன் வெளியிட்ட

நாம அடிமைகள்னு அவங்களே முடிவு பண்ணிக்கிட்டாங்களா: இயக்குனர் சேரன் ஆவேசம்

கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கனமழை பெய்து வருகிறது என்பதும், பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வீடுகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் வெள்ள நீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது

மேலும் ஒரு வருஷத்துக்கு வொர்க் பிஃரம் ஹோம்… முக்கிய நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!!

கடந்த பிப்ரவரியில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்த நிலையில் கூகுள் நிறுவனம் அதன் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிசெய்யுமாறு அறிவிப்பு வெளியிட்டது.

த்ரிஷா குறித்து திடுக்கிடும் வீடியோவை வெளியிட்ட மீராமிதுன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை மீராமிதுன் அவ்வப்போது திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது தனது டுவிட்டர் மூலம் குற்றம்சாட்டி வருகிறார்.

கஞ்சா கிடைக்காததால் கோபத்தில் கத்தியை விழுங்கிய ஆசாமி!!! அதிர்ச்சித் தகவல்!!!

ஹரியாணா மாநிலத்தில் 28 வயது இளைஞர் ஒருவர் கஞ்சா கிடைக்காமல் விரக்தியில் சமையலறை கத்தியை விழுங்கிய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.