விஜய் அம்மா ஷோபா அறிமுகம் செய்த நடிகை துறவறம்.. கும்பமேளாவில் அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் துறவறம் கொண்டதாக சற்றுமுன் அறிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி இருந்தாலும் அவர் ’நண்பர்கள்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் மூலம் தான் மம்தா குல்கர்னி என்பவர் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு இவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது 52 வயதாகும் நடிகை மம்தா குல்கர்னி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் தற்போது அவர் உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த கும்பமேளாவில் அவர் துறவறம் கொள்ள இருப்பதாக தனது விருப்பத்தை தெரிவித்தார்.
இதையடுத்து அவருக்கு அதற்கான முறை சடங்குகள் செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து மம்தா குல்கர்னி துறவறம் பூண்டதாக அறிவிக்கப்பட்டது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து அவர் திரிவேணி சங்கமத்தில் நீராடியதாகவும் அவருக்கு ஷியாமாய் மம்தானந்த் கிரி என்ற புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com