close
Choose your channels

சென்னையில் நடிகை யாஷிகா தூக்குபோட்டு தற்கொலை

Thursday, February 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் துணை நடிகை யாஷிகா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் திரைத்துறையினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

விமல் நடித்த 'மன்னார் வகையறா' உள்பட ஒருசில படங்களில் துணை நடிகையாகவும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர் திருப்பூரை சேர்ந்த யாஷிகா. சென்னை வடபழனியில் தங்கியிருந்த இவர் பெரும்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து அவருடன் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருவருக்கும் சமீபத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து யாஷிகாவை பிரிந்து அவரது காதலர் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று அவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் தன்னை காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு தக்க தண்டனை பெற்றுக்கொடுங்கள் என்று தனது தாயாருக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.