close
Choose your channels

கமல் கட்சியில் ஐந்து பொதுச்செயலாளர்கள்: அதிரடி உத்தரவு

Wednesday, August 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஏற்கனவே அருணாச்சலம் என்பவர் பொதுச்செயலாளராக இருந்து வரும் நிலையில் தற்போது மேலும் 4 பேர்கள் பொதுச்செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4 புதிய பொதுச்செயலாளர்களாக ஏஜி.மௌர்யா, வி.உமாதேவி, ஆர்.ரங்கராஜன், பஷீர் அகமது ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த உத்தரவை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சற்றுமுன் பிறப்பித்துள்ளார்.

எனவே மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அருணாச்சலம், ஏஜி.மௌர்யா, வி.உமாதேவி, ஆர்.ரங்கராஜன், பஷீர் அகமது ஆகிய ஐவர் இனிமேல் பொதுச்செயலாளர்களாக செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட மக்கள் நீதி மய்யம் கட்சி வெற்றி பெறவில்லை என்றாலும், வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற தீவிர களப்பணி செய்து வருகிறது. மேலும் இக்கட்சிக்கு அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுவதால் இனிவரும் தேர்தலில் கமல் கட்சி வெற்றி வாகை சூடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.