close
Choose your channels

4 வருடம் கழித்து கம்பேக் கொடுத்த தமிழ் நடிகை… புதுப்படம் குறித்து நெகிழ்ச்சி அனுபவம்!

Thursday, July 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான "அருவி" எனும் ஒற்றைத் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களிடையேயும் பெருத்த வரவேற்பை பெற்றவர் நடிகை அதிதி பாலன். இந்தத் திரைப்படத்திற்கு பிறகு கடந்த 4 வருடங்களாக அவர் வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்காத நிலையில் மலையாளத்தில் இவர் நடித்த முதல் திரைப்படம் நேற்று வெளியாகி உள்ளது. அந்த அனுபவத்தை நடிகை அதிதிபாலன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான "கோல்ட் கேஸ்" திரைப்படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. த்ரில்லர் கதைக்களம் கொண்ட இந்தப் படத்தில் நடிகை அதிதிபாலன் பத்திரிக்கை நிருபராக நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு முன்பு மலையாளத்தில் நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து "படவேட்டு" என்ற திரைப்படத்தில் அவர் நடித்து இருந்தாலும் "கோல்ட் கேஸ்" முந்திக் கொண்டு நேற்று ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

இந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நடிகை அதிதி, நடிகர் பிருத்விராஜுடன் இணைந்து நடிக்க வேண்டுமே என்ற பதட்டம் இருந்தது. ஆனால் அந்த டென்ஷனை போக்கிய நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் சில நுணுக்கங்களையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். குறிப்பாக அவர் ஒரு இயக்குநர் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் கண்ணோட்டத்துடன் இருந்து அணுகுகிறார். இதனால் டைரக்ஷன் நுணுக்கங்களை எளிதாகக் கற்றுக் கொள்ள முடிந்தது எனத் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான "என்னை அறிந்தால்" படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அதிதி பாலன். பின்பு இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான "அருவி" திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். இத்தனை எதிர்பார்ப்பிற்கு பிறகு அவர் எந்தத் திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்தாக நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நலன் குமாரசாமியுடன் இணைந்து "குட்டி ஸ்டோரி" எனும் ஆந்தாலஜி படத்தில் மட்டும் அவர் நடித்து இருந்தார். தற்போது மலையாளத்தில் "கோல்ட் கேஸ்" வெளியாகி இருக்கிறது. மேலும் "படவேட்டு" எனும் மலையாளப் படங்களிலும் தெலுங்கில் "சகுந்தலம்" எனும் புது திரைப்படத்திலும் தமிழில் "நவராசா" எனும் திரைப்படத்திலும் இணைந்து நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.