close
Choose your channels

எனக்கு 9 வயதிலேயே காதல் கடிதம் வந்தது! மணிரத்னம் நாயகி

Monday, May 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' மற்றும் 'செக்க சிவந்த வானம்' போன்ற படங்களில் நடித்த நடிகை அதிதிராவ் ஹைதி தனக்கு 9 வயதிலேயே காதல் கடிதம் வந்ததாகவும் அதனை தனது தாயாரிடம் காண்பித்ததாகவும் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

தான் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது தன்னுடைய சீனியர் மாணவர் ஒருவர் இரண்டு பக்கத்தில் காதல் கடிதம் எழுதி கொடுத்ததாகவும், அந்த 9 வயதில் தனக்கு காதல் என்றால் என்னவென்றே தெரியாது என்றும், அந்த கடிதத்தில் தான் அழகாக இருப்பதாகவும், வேறு என்னென்னவோ இருந்ததாகவும் அதிதிராவ் தெரிவித்தார். அந்த கடிதத்தை உடனே தனது தாயாரிடம் பெருமையாக காண்பித்ததாகவும் கூறினார்

மேலும் டேட்டிங் குறித்த கேள்விக்கு 'தனக்கு 21 வயதிலேயே திருமணம் ஆகியிருந்தாலும் டேட்டிங் என்றால் என்ன என்றே தெரியாது, டேட்டிங் விஷயத்தில் தான் ஜீரோ என்றும் தெரிவித்தார். நடிகை அதிதிராவ் தனது 21வது வயதில் சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து அதன் பின் ஒருசில ஆண்டுகளில் கணவரை பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அதிதிராவ் ஹைதி தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் 'சைக்கோ' என்ற திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்து வருகிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.