விமர்சனங்களுக்கு தக்கப் பதிலடி… சமூகவலைத் தளத்தில் பாராட்டுகளைக் குவித்து வரும் தமிழக முதல்வர்!!!

கொரோனா வைரஸ் பரவல், நீட் தேர்வு போன்ற விவகாரங்களில் தமிழக அரசு பெரும் தவறிழைத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தக்கப் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் சமூக வலைத்தளங்களில் தமிழக முதல்வர் அதிகம் கொண்டாடப்படும் நபராக மாறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கொரோனா வைரஸ் பரவலைக் கையாளுவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டிவருகிறது என்ற கடுமையான குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்தன. ஆனால் இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்யும் மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமே தகவல் தெரிவித்து உள்ளது. அதைத்தவிர கொரேனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுவதாகச் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

மேலும் கொரோனா தாக்கத்தால் தமிகழத்தின் பொருளாதார வருவாய் முற்றிலும் குறைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் அடுத்த குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தன. ஆனால் கொரோனா நேரத்திலும் இந்திய அளவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது என தரவுகள் வெளியாகி இந்தக் குற்றச்சாட்டுக்கும் தற்போது முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதைத்தவிர நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு, மத்திய அரசுக்கு சாதகமாகச் செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வு முறையை ஆரம்பித்து வைத்ததே எதிர்க்கட்சியோடு கூட்டணி வைத்து இருக்கும் கட்சித்தான், மேலும் நீட்தேர்வுக்கு ஆதரவாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் வாதாடினார்கள் என்ற தகவலை மிகவும் ஆக்ரோஷத்தோடு தமிழக முதல்வர் எடபப்டி பழனிசாமி சட்டமன்றக் கூட்டத்தொடரில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நீட் தேர்வு விவகாரம் குறித்து சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய தமிழக முதல்வரின் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் கடும் வைரலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக அரசு பெரும் தவறு இழைத்துவிட்டதாகக் கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை. மேலும் நீட்டுக்கு எதிராகவே அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என்பதையும் தமிழக முதல்வர் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தெளிவுப்படுத்தினார்.

More News

10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம், 10 கிராமங்களை காப்பாற்றிய நடிகர் கார்த்தி!

ஒரு பக்கம் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்காக பாடுபட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவரது சகோதரர் கார்த்தியின் உழவன் பவுண்டேஷன்

இன்னும் ஒரே ஒருநாள் தான், எங்க தல வர்றாரு விசில் போடு: பிரபல நடிகையின் டுவீட்

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது என்பதும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளது என்பதும் தெரிந்ததே 

பிறந்தநாளில் நயனுடன் ரொமான்ஸ் போஸில் விக்னேஷ் சிவன்: வைரலாகும் புகைப்படம்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த சில நாட்களாக கோவா சுற்றுப்பயணத்தில் உள்ளனர் என்பது தெரிந்ததே.

நள்ளிரவு 12 மணிக்கு அடுத்த பட தகவலை அறிவிக்கும் பிரபல இயக்குனர்!

கோலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'சைக்கோ' திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

16 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரபல இயக்குனரால் கிராமத்துக்கு திரும்பும் சிம்பு!

சிம்பு நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் நகரத்து கதையம்சம் கொண்ட படங்களாகவே இருந்த நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு ஹரி இயக்கிய 'கோவில்' என்ற திரைப்படம் முழுக்க முழுக்க