ஓபிஎஸ் மூலம் எனக்கு மிரட்டல் வருகிறது. சி.ஆர்.சரஸ்வதி
- IndiaGlitz, [Friday,February 10 2017]
தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்த பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களில் ஒருவரான சி.ஆர்.சரஸ்வதி தனக்கு மிரட்டல் வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஏற்கனவே நேற்று தன்னை போன் மூலம் மர்ம நபர்கள் மிரட்டுவதாக சி.ஆர்.சரஸ்வதி கூறிய நிலையில் சற்று முன்னர் அவர் ஓபிஎஸ் மூலம் தனக்கு மிரட்டல் வருவதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே சமூக வலைத்தள பயனாளிகள் சி.ஆர்.சரஸ்வதியை கடுமையாக கிண்டல் செய்து வரும் நிலையில் தற்போது ஓபிஎஸ் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு அவர்களிடம் இருந்து என்ன ரியாக்சன் வரவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்