கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி கொடுத்த அதிமுக! எம்பி, எம்.எல்.ஏக்களின் ஒருமாத சம்பளமும் அளிப்பதாக அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,May 17 2021]

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாஅல் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக பலரும் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவின் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அனைத்திந்தி அண்ணா‌ திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ கொரோனா நோய்‌ தடுப்பு மற்றும்‌ நிவாரணப்‌ பணிகளுக்காக முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின்‌ ஒரு மாத ஊதியமும்‌ வழங்கப்படும்‌.

கொரோனா பெருந்தொற்றினால்‌ கடும்‌ பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும்‌ தமிழ்‌ நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித்‌ தரவும்‌, உரிய நிவாரணங்களை வழங்கவும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌, முதலமைச்சர்‌ பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்‌ அளிக்கப்படும்‌.

மேலும்‌, கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின்‌ ஒரு மாத ஊதியமும்‌, கொரோனா நிவாரணப்‌ பணிகளுக்கென முதலமைச்சர்‌ பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்‌.

'இப்பெருந்தொற்றின்‌ முதல்‌ அலை மக்களை தாக்கிய நேரத்தில்‌, கடந்த ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ தமிழ்‌ நாடு அரசிடம்‌ 1 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டது. இப்பொழுது அரசிடம்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வழங்கப்படுகின்ற 1 கோடி ரூபாய்‌ மற்றும்‌ கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின்‌ ஒரு மாத ஊதியம்‌ ஆகியவற்றோடு, ஆங்காங்கே கழக உடன்பிறப்புகள்‌ தங்கள்‌ பகுதிகளில்‌ அல்லலுறும்‌ மக்களுக்கு கொடைக்கரம்‌ விரித்து நீட்டி நம்‌ கொள்கை வழி நின்று மக்களின்‌ துன்பம்‌ துடைத்திட வேண்டும்‌ என்று அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

“கருணை தீபம்‌ ஏற்றி வைத்ததெங்கள்‌ நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள்‌ வாழும்‌ நாட்டிலே.
ஒன்று எங்கள்‌ ஜாதியே ஒன்று எங்கள்‌ நீதியே

என்ற புரட்சித்‌ தலைவரின்‌ கொள்கை வழி நின்று கழக உடன்பிறப்புகள்‌ நிவாரணப்‌பணிகளில்‌ அக்கறை கொள்ளுங்கள்‌ என்று புரட்சித்‌ தலைவி அம்மாவின்‌ பெயரால்‌ வேண்டி கேட்டுக்கொள்கிறோம்‌.


 

More News

சமந்தா அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது தமிழில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும்'காத்துவாக்குல ரெண்டு காதல்'

Blood Moon ஆகும் சந்திரன்… எப்போது? வெறும் கண்களால் பார்க்கலாமா?

சூரியன்-பூமி-சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரிய ஒளி நிலவில் படாது.

குடிபோதை...! வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் பெண் போலீசை மிரட்டிய திமுக பிரமுகர்...!

குடிபோதையில் பெண் காவல் ஆய்வாளரை திமுக பிரமுகர் மிரட்டிய சம்பவம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக்கில் மலர்ந்த வெற்றுக் காதல்… இளம்பெண்ணை 25 பேர் கூட்டு பாலியல் செய்த கொடூரம்!

கொரோனா பேரிடரால் இந்தியாவே நிலைக் குலைந்து போய் இருக்கிறது

நீராவி கொரோனாவை கட்டுப்படுத்துமா? எப்படி செய்ய வேண்டும்? விளக்கும் வீடியோ!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று தற்போது தீவிரம் பெற்று இருக்கிறது.